ADDED : அக் 24, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி,கோபி அருகே கரட்டுப்பாளையம் கிராமம், ஆயிபாளையம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன், 34, கட்டட தொழிலாளி; மனைவி, ஒரு பெண் கைக்குழந்தை
உள்ளது.
ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், வீட்டு சமையலறையின் ஒரு பகுதி சுவர் நேற்று காலை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும்
ஏற்படவில்லை.

