/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாதாள சாக்கடை கழிவுநீரில் நடந்து செல்லும் அவலம்
/
பாதாள சாக்கடை கழிவுநீரில் நடந்து செல்லும் அவலம்
ADDED : ஆக 13, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 13வது வார்டு கொத்துக்காரர் தோட்டத்தில், பாதாள சாக்கடை மேன்ஹோல் வழியாக நேற்று கழிவுநீர் வெளி-யேறி சாலையில் தேங்கியது. அப்போது பள்ளிக்கு சென்ற மாண-வர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாலர்கள் கழிவுநீரை மிதித்-தபடி நடந்து சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:எங்கள் பகுதியில் சாக்கடை துார்வாரும் பணி முறையாக நடப்ப-தில்லை. நான்கு நாட்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. சாலையும் குறுகலாக உள்-ளதால், கழிவுநீரின் மீது நடந்து செல்ல வேண்டியுள்ளது. கழி-வுநீர் வெளியேறாதவாறு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.