ADDED : டிச 11, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, கள்ளுக்கடை மேடு கிழக்கு பட்டக்காரர் வீதியை சேர்ந்-தவர் கார்த்திகேயன், 50.
இவர் கடந்த ஆக., 6ல் மாணிக்கம் பாளையத்தில் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கினார். ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த, 1ல் உடல் நிலை மோசமடைந்தது. பெருந்-துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 9ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். கார்த்தி-கேயன் மனைவி அமுதா அளித்த புகார்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

