/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசுப்பள்ளி அருகே தொழிலாளி சடலம் கொலையா என போலீசார் விசாரணை
/
அரசுப்பள்ளி அருகே தொழிலாளி சடலம் கொலையா என போலீசார் விசாரணை
அரசுப்பள்ளி அருகே தொழிலாளி சடலம் கொலையா என போலீசார் விசாரணை
அரசுப்பள்ளி அருகே தொழிலாளி சடலம் கொலையா என போலீசார் விசாரணை
ADDED : நவ 13, 2024 03:07 AM
பு.புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி
ஜெ.ஜெ.நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே, உடலில் காயங்களுடன்
வாலிபர் ஒருவர் நேற்று காலை சடலமாக கிடந்தார்.
மக்கள் தகவலின்படி
புன்செய்புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் சுப்பு ரத்தினம் தலைமையிலான
போலீசார் சென்றனர். சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்து விசாரித்தனர்.
இதில், இறந்து கிடந்தவர் அதே பகுதியை
சேர்ந்த கூலி தொழிலாளி ராமச்சந்திரன், 35, என்பது தெரிந்தது.
திருமணமான அவருக்கு மனைவி மற்றும் 7, 6 வயதில் இரு பெண் குழந்தை
உள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து சென்றவர்,
அரசுப்பள்ளி அருகில் சடலமாக கிடந்ததும் தெரிய வந்தது. உடலில்
காயங்கள் மற்றும் வாயில் ரத்தம் வடிந்திருந்தது. இதனால் கொலை
செய்யப்பட்டாரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து
விசாரணை மேற்கொண்டுள்ளனர்.