sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காந்திஜி சாலையில் வாகனத்தில் பழக்கடை விபத்து அபாயத்தை கண்டுக்காத போலீசார்

/

காந்திஜி சாலையில் வாகனத்தில் பழக்கடை விபத்து அபாயத்தை கண்டுக்காத போலீசார்

காந்திஜி சாலையில் வாகனத்தில் பழக்கடை விபத்து அபாயத்தை கண்டுக்காத போலீசார்

காந்திஜி சாலையில் வாகனத்தில் பழக்கடை விபத்து அபாயத்தை கண்டுக்காத போலீசார்


ADDED : மார் 11, 2024 11:49 AM

Google News

ADDED : மார் 11, 2024 11:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகரில் சமீப காலமாக, வாகனங்களில் வைத்து பழ விற்பனை நடப்பது அதிகரித்துள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: காந்திஜி சாலையில் தினமும் காலை முதல் இரவு வரை, 10க்கும் மேற்பட்ட பழக்கடைகள் சிறிய ரக சரக்கு ஆட்டோவில் சாலையோரம் நடக்கிறது. சென்னிமலை சாலை, சத்தி சாலை, ஈரோடு தெற்கு எல்.ஐ.சி, அலுவலக பகுதிகளிலும் வாகன பழக்கடைகளை காணலாம்.

தற்போது மாநகரில் நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி உள்ளிட்ட துறைகளால் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் குறுகலாகியுள்ளது. ஆனாலும், குறுகலான காந்திஜி சாலையில்தான் சாலையோர பழக்கடை வியாபாரம் நடக்கிறது. வாகனத்தில் செல்வோர் திடீர், திடீரென நிறுத்துவதால், வாகன விபத்துக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது.

காந்திஜி சாலை பாலத்தின் ஓரம் மட்டும், 5 பழக்கடை வாகனங்களில் தினமும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் வாகன விபத்து அபாயம் இருப்பதை அறிந்தும், போக்குவரத்து போலீசார் மற்றும் சூரம்பட்டி போலீசார் கண்டு கொள்வதில்லை. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us