/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
13வது நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்
/
13வது நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 31, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:சட்டசபை
தேர்தல் தி.மு.க., அறிவித்த, அரசு போக்குவரத்து கழகம் மற்றும்
ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கடந்த, 2003
ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை
அமலாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு
போக்குவரத்து ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில், பல்வஏஈரோடு,
சென்னிமலை சாலை, அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்,
கடந்த, 18ம் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.
13வது நாளாக
நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகையா
தலைமை வகித்தார்.

