sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆணையரின் உத்தரவை கண்டுக்காத ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் பஸ் ஸ்டாண்டில் கொடி கட்டி பறக்கும் ஆளுங்கட்சி அதிகாரம்

/

ஆணையரின் உத்தரவை கண்டுக்காத ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் பஸ் ஸ்டாண்டில் கொடி கட்டி பறக்கும் ஆளுங்கட்சி அதிகாரம்

ஆணையரின் உத்தரவை கண்டுக்காத ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் பஸ் ஸ்டாண்டில் கொடி கட்டி பறக்கும் ஆளுங்கட்சி அதிகாரம்

ஆணையரின் உத்தரவை கண்டுக்காத ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் பஸ் ஸ்டாண்டில் கொடி கட்டி பறக்கும் ஆளுங்கட்சி அதிகாரம்


ADDED : ஜூலை 06, 2025 01:36 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் மக்களுக்கு தேவையான கடைகள், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் நடைபாதைகளை ஆக்கிரமித்து, தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக நடைபாதை, கட்டண கழிப்பிடம் அருகில் தள்ளுவண்டி கடைக்காரர்கள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் பஸ்கள் வருவதை கூட அறியாமல், ஆபத்தான முறையில் மக்கள் அந்த கடைகளில் நிற்கின்றனர். அதேபோல பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பஸ்களுக்கு போதிய வழிகள் இல்லாததால், டிரைவர்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் பஸ் ஸ்டாண்டில் ஆய்வு நடத்தி, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தாலும், ஆளுங்கட்சியினரின் ஆதரவுடன் மீண்டும் தொடர செய்கிறது. இது தொடர்பாக நமது நாளிதழில் தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்நிலையில்தான் புதிதாக கமிஷனராக பொறுப்பேற்ற அர்பித் ஜெயின் ஆய்வுகளை மேற்கொண்டார். ஆனாலும் பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் வெளியேறவில்லை.

இந்நிலையில் நேற்று மீண்டும் பஸ் ஸ்டாண்டில் ஆணையர் ஆய்வு நடத்தினார். அப்போது வழக்கம்போல கட்டண கழிப்பிடம் அருகில், நடைபாதைகளில் தள்ளுவண்டி கடைகள் செயல்பட்டதை பார்த்து, கடைகளை உடனடியாக அகற்றவும், அந்த பகுதிகளில் பேரிகார்டுகளை வைக்கவும் உத்தரவிட்டு சென்றார்.

அப்போதைக்கு தள்ளுவண்டி கடைக்காரர்கள் கடைகளை எடுத்து சென்றனர். அவர் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் வண்டிகளை கொண்டு வந்து வியாபாரத்தை தொடங்கினர். ஆளுங்கட்சியினரின் ஆதரவே இதற்கு காரணம் என்பது தெரிய வருகிறது. மாநகராட்சி கமிஷனர் உத்தரவுக்கு மதிப்பில்லாத நிலைதான் உள்ளது என்றும் மக்கள் தரப்பில் குமுறல் எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us