ADDED : அக் 04, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாத்திர கடையில்
திருடியவர் கைது
ஈரோடு, அக். 4-
ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் விசாகம் பாத்திர கடை செயல்படுகிறது. இதன் உரிமையாளர் நித்யா. கடையில் சில நாட்களுக்கு முன் மேற்கூரை சிமெண்ட் அட்டையை உடைத்து, 30 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது. நித்யா புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனி, சின்ன காளையார் புதுார் கிழக்கு வீதியை சேர்ந்த மகுடீஸ்வரன், 38, என்பவரை திருச்சியில் போலீசார் நேற்று கைது செய்தனர். பழங்குற்றவாளியான இவர் மீது, திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.