ADDED : ஜூலை 15, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: மொடக்குறிச்சி அருகே காகம், எல்லக்கடையை சேர்ந்த செந்தில்-குமார் மனைவி சுபானா, 35; காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். செந்தில்குமா-ருக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து மது குடித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சுபானா, சல்பாஸ் மாத்திரையை தின்று விட்டார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். மொடக்-குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.