sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோவிலில் நிறுத்தியிருந்த டூ - வீலர்கள் எரிந்து நாசம்

/

கோவிலில் நிறுத்தியிருந்த டூ - வீலர்கள் எரிந்து நாசம்

கோவிலில் நிறுத்தியிருந்த டூ - வீலர்கள் எரிந்து நாசம்

கோவிலில் நிறுத்தியிருந்த டூ - வீலர்கள் எரிந்து நாசம்


ADDED : அக் 09, 2024 01:43 AM

Google News

ADDED : அக் 09, 2024 01:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு, சின்ன சடையம்பாளையம் மாரியம்மன் கோவிலில், சமீபத்தில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து மண்டல பூஜை துவங்கியது. பூஜை நிறைவடைய உள்ளதால், கோவில் நிர்வாகி குப்புசாமி தலைமையில், ராமேஸ்வரத்தில் தீர்த்தம் எடுத்துவர, 6ம் தேதி இரவு சிலர் சென்றனர்.

இவர்கள் வந்த டூ - வீலர், மொபட் உள்ளிட்ட 10 வாகனங்கள், கும்பாபிஷேகத்துக்காக கோவில் முன் போடப்பட்டிருந்த தகர ஷீட் கூரையின் அடியில் நிறுத்தியிருந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் தகர ஷீட் தீப்பிடித்தது. எரிந்த நிலையில் டூ - வீலர்கள் மீது விழுந்ததில் டூ - வீலர்களும் எரியத் துவங்கின. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், 45 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், 10 டூ - வீலர்களும் முற்றிலும் எரிந்து விட்டன.

ஈரோடு தாலுகா போலீசார், தடய அறிவியல் துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர். இடி, மின்னல் தாக்கியதால் தீ விபத்து சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us