ADDED : அக் 10, 2024 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள ஊத்துப்பாளை-யத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 56. கூலித்தொழிலாளியான இவர் கடந்த, 7, காலை 8:00 மணியளவில், தளவாய்பட்டினம் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, எதிரே கருப்புசாமி என்-பவர் ஓட்டி வந்த, பால் வண்டி மோதியதில், சுப்பிரமணி படு-காயம் அடைந்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டார். பின், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மதியம் உயிரி-ழந்தார். அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.