ADDED : டிச 08, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாபாரி வீட்டில் திருட்டு
காங்கேயம், டிச. 8-
காங்கேயம், புதுவாய்க்கால் மேட்டை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் சர்மா, 57, தேங்காய் பருப்பு வியாபாரி. தனது குடும்பத்துடன் கடந்த, 1ம் தேதி கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று நள்ளிரவு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. புகாரின்படி காங்கேயம் போலீசார், களவாணியை தேடி வருகின்றனர்.