/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திம்மராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
/
திம்மராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED : அக் 13, 2024 08:35 AM
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே கீழ்முடுதுறை திம்மராய பெருமாள் கோவிலில், நடப்பாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த, 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.
இதையொட்டி திம்மராய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி சுவா-மிகள் அலங்காரம் செய்யப்பட்டு,
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் எழுந்தருளினர். பெருமாளுக்கும், தாயார்களுக்கும்
ரக்-ஸாபந்தனந்த்தை தொடர்ந்து வஸ்திரங்கள் சாற்றப்பட்டன.பின் மாங்கல்ய பூஜை செய்து, திருமாங்கல்யத்தை பூதேவி, ஸ்ரீதேவி தாயார்களுக்கு பட்டாச்சார்கள்
அணிவித்தனர். இதை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்வு, தீபாராதனை நடந்தது. ஈரோடு
மட்டுமின்றி கோவை, நீலகிரி மாவட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர். தம்பதி சமேத பெருமாள்
உற்சவர், திருத்-தேரில் எழுந்தருளி கோவில் உலா நடந்தது.