sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அந்தியூர் சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன் மழை ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்ததால் சோகம்

/

அந்தியூர் சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன் மழை ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்ததால் சோகம்

அந்தியூர் சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன் மழை ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்ததால் சோகம்

அந்தியூர் சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன் மழை ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்ததால் சோகம்


ADDED : ஏப் 07, 2025 02:40 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான எண்ணமங்கலம், மூலக்கடை, ராமகவுண்டன்கொட்டகை, முத்தரசன்குட்டை உள்-ளிட்ட இடங்களில், நேற்று மாலை, 5:௦௦ மணிக்கு மிதமான மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆர்.ஜி.கே.புதுாரை சேர்ந்த ராசு தோட்டத்தில், கதளி ரக வாழை, 500 மரங்கள், வட்டக்காடு நிர்-மல்குமார் தோட்டத்தில், 100 செவ்வாழை மரம், அதே பகு-தியில் குமார் தோட்டத்தில், 400 செவ்வாழை மரம், முத்தரசன்-குட்டையில் தேவராஜ் வாழை தோட்டத்தில், 100 கதளி ரக மரங்-களும் முறிந்தன.

* பர்கூர் மலைப் பகுதியில் தாமரைக்கரை, ஈரட்டி, தேவர்மலை, பர்கூர், ஓசூர், தட்டகரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை, 4:௦௦ மணி முதல், 5:௦௦ மணி வரை ஒரு மணி நேரம் பலத்த காற்-றுடன் கனமழை பெய்தது.

இதேபோல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளான சங்கராப்பா-ளையம், எண்ணமங்கலம், மைக்கேல்பாளையம், பச்சாம்பா-ளையம் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்துக்கும் மேலாக துாறல் மழை பெய்தது.

காற்றால் முறிந்த மின் கம்பம்

கடம்பூர்மலையில் நேற்று மதியம் முதல் மாலை வரை இடை-வெளி விட்டு மழை பெய்தபடியே இருந்தது. அணைக்கரை மற்றும் மாக்கம்பாளையம் வழியில் அணைக்காடு பகுதியில் சூறாவளி காற்றால், ௪ மின் கம்பங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. ஏற்கனவே கடம்பூர் மலை பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

சேற்றில் சிக்கிய மினி பஸ்

பர்கூர்மலையின் கிழக்கு மற்றும் மேற்கு மலையில் நேற்று முன்-தினம் கனமழை பெய்தது. இதில் ஒசூர், கொங்காடை, செங்கு-ளத்தில் பலத்த மழை பெய்தது.

இதனால் ஒசூர் அருகே உள்ள மண் ரோடு சேறு, சகதியானது. அப்போது அவ்வழியே கொங்காடை சென்ற அரசு மினி பஸ் சேற்றில் சிக்கியது. அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்கப்பட்-டது.

* நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிளான குருமந்துார், எலத்துார், மூணாம்பள்ளி, சூரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை, 5:00 மணிக்கு தொடங்கிய மழை, 6:00 மணி வரை கனமழையாக கொட்டி தீர்த்தது.

அப்போது பலத்த காற்றும் வீசியது. பலத்த காற்றால் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஐந்து மரங்களும், நம்-பியூர், சூரிபாளையம் பகுதியில் பல்வேறு

இடங்களில் வேருடனும் மரங்கள் சாய்ந்தன

நிருபர் குழு.






      Dinamalar
      Follow us