/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிரிவலம் சென்ற அருணாசலேஸ்வரர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
/
கிரிவலம் சென்ற அருணாசலேஸ்வரர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
கிரிவலம் சென்ற அருணாசலேஸ்வரர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
கிரிவலம் சென்ற அருணாசலேஸ்வரர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
ADDED : டிச 16, 2024 04:08 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, தீப திருவிழாவில் அருணாசலேஸ்வரர் கிரி-வலம் சென்றார். வழி நெடுகிலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவி-ழாவில் கடந்த, 13ல், மஹா தீபம் ஏற்றப்பட்டது. விழாவை-யொட்டி உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பரா-சக்தி அம்மன், துர்க்கையம்மனுடன், நேற்று கிரிவலம் சென்றார். வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில்கள், அடி அண்ணாம-லையில் ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. தை மாதத்தில் நடக்கும் திருவூடல் திருவிழா மற்றும் தீப விழாவில், மஹா தீபம் ஏற்றிய மூன்றாவது நாள் என, ஆண்டுக்கு இரு முறை மட்டுமே அருணாசலேஸ்வரர் கிரி-வலம் செல்வார்.
இதை தொடர்ந்து அய்யங்குளத்தில் நேற்றிரவு தெப்பம் உற்சவம் நடந்தது. இதில் பராசக்தி அம்மன் மூன்று முறை வலம் வந்தார். இந்நிகழ்விலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்-டனர்.