ADDED : ஜூலை 12, 2026 05:50 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாணிக்கம்பாளையம் வக்கீல் தோட்டம் சிவானந்தம் மகன் சரவணன் (எ) சரவண குமார், 27; தறி பட்டறை தொழிலாளி. பெரியவலசு திலகர் வீதியில் சென்றவரை,
வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர்.நகர் காசி விஸ்வ நாதன், 30, இவரது நண்பர்களான பெரியவலசு சுப்பிரமணிய சிவா வீதி மனோஜ், 21; வீரப்பன்சத்திரம் லோகநாதன் மகன் பிரவீன் குமார், 25; இவர்களுக்கும் சரவணனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. இதில் மூவரும் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
