/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தம்பதி கொலையில் சிக்கிய மூவர் மண்வெட்டியால் தாக்கியது அம்பலம்
/
தம்பதி கொலையில் சிக்கிய மூவர் மண்வெட்டியால் தாக்கியது அம்பலம்
தம்பதி கொலையில் சிக்கிய மூவர் மண்வெட்டியால் தாக்கியது அம்பலம்
தம்பதி கொலையில் சிக்கிய மூவர் மண்வெட்டியால் தாக்கியது அம்பலம்
ADDED : மே 19, 2025 03:12 AM

ஈரோடு: சிவகிரி தம்பதி கொலை வழக்கில் சிக்கிய அறச்சலுாரை சேர்ந்த பழைய குற்றவாளிகள் மூவரிடம், கடத்துார் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், சிவகிரி, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்த முதிய தம்பதி ராமசாமி - பாக்கியம். இவர்கள், ஏப்., 28ல் மர்ம கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை பிடிக்க, 12 தனிப்படைகள் மற்றும், 600க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
அருகில் உள்ள அறச்சலுார் என்ற ஊரை சேர்ந்த பழைய குற்றவாளி ஆச்சியப்பன், 48, என்பவரை போலீசார் விசாரித்தனர். மேலும், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களான மாதேஸ்வரன், 53, ரமேஷ், 52, ஆகிய மூவரையும், கடத்துார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடத்தில் நடந்த மூவர் கொலையிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
மண்வெட்டியின் மரப்பிடியால் ராமசாமி - பாக்கியம் தம்பதியை தாக்கி கொலை செய்துள்ள இவர்கள், சிறு கத்திகளால் கை, காதுகளை வெட்டி நகைகளை திருடி சென்றதும் தெரிய வந்துள்ளது.
சிவகிரி மேகரையான் தோட்டத்தில், மண்வெட்டி பிடி, சிறு கத்திகளை வீசி சென்றதாக தெரிகிறது. இதை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, பிடிபட்ட மூவரின் ரத்தக்கறை படிந்த சட்டை, மொபைல் போன், சிம் கார்டு உள்ளிட்ட ஆதாரங்களை, அறச்சலுாரில் உள்ள அவர்களது வீடுகளில் போலீசார் தேடி வருகின்றனர்.