/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தந்தம் விற்க முயற்சி மேலும் மூவர் கைது
/
தந்தம் விற்க முயற்சி மேலும் மூவர் கைது
ADDED : ஆக 06, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் - சுந்தராம்பாளையம் வாய்க்கால் கரை பகுதியில், யானை தந்தம் விற்பனை செய்ய வந்த, சேலம் மாவட்டம் சங்ககிரி, குள்ளம்பட்டி, அரசிராமணி கணேசன், 49; பெரியசாமி, 56; ஆகியோரை, வனத்துறையினர் பொறி வைத்து பிடித்தனர்.
தலைமறைவான மேட்டூர் பாலமலை செல்லப்பன், 40, என்பவரை தேடி வந்தனர். சென்னம்பட்டி வன அலுவலகத்தில் அவர் சரணடைந்தார். அவர் தந்த தகவலின்படி, பாலமலை மணி, 42; கொளத்துார், செங்கல்மேடு பாலமுருகன், 45, ஆகியோரை, வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். மூவரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.

