ADDED : ஏப் 09, 2026 03:41 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்: பிரம்மதேசம் வேம்பாரி பெத்தாரம்மன் கோவில் அருகில், அத்-தாணி ஆர்.ஐ., வளர்மதி, பிரம்மதேசம் வி.ஏ.ஓ., அருள்மணி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, காட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியிலி-ருந்து மண் லோடுடன் வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது, டிரைவர் தப்பியோடினார். இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், அந்தியூர் போலீசில் புகாரளித்தனர்.
