sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடிவேரியில் குளிக்க வழியின்றி சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

/

கொடிவேரியில் குளிக்க வழியின்றி சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கொடிவேரியில் குளிக்க வழியின்றி சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கொடிவேரியில் குளிக்க வழியின்றி சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


ADDED : ஜன 02, 2025 01:39 AM

Google News

ADDED : ஜன 02, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, ஜன. 2-

கொடிவேரி தடுப்பணை வழியாக, தண்ணீர் அருவியாக கொட்டாததால், ஆங்கில புத்தாண்டு நாளில், சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. இதனால் குளிக்கும் வசதி எளிது என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆங்கில புத்தாண்டு நாளான நேற்று, ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணையில் குவிந்தனர். ஆனால் தடுப்பணை வழியாக நேற்று வினாடிக்கு, 20 கன அடி மட்டுமே தண்ணீர் வெளியேறியது. இதனால் தண்ணீர் கொட்டாததால், சுற்றுலா பயணிகள் குளிக்க வழியின்றி ஏமாற்றத்துடன், பவானி ஆற்றில் தேங்கி நின்ற தண்ணீரில் குளித்து சென்றனர். சிலர் பரிசல் பயணம் சென்று, அவரவர் ஊர் திரும்பி சென்றனர்.






      Dinamalar
      Follow us