sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டி.என்.பாளையம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை மரங்கள் விழுந்து அறுபட்ட மின் கம்பிகள்

/

டி.என்.பாளையம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை மரங்கள் விழுந்து அறுபட்ட மின் கம்பிகள்

டி.என்.பாளையம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை மரங்கள் விழுந்து அறுபட்ட மின் கம்பிகள்

டி.என்.பாளையம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை மரங்கள் விழுந்து அறுபட்ட மின் கம்பிகள்


ADDED : மே 05, 2025 02:29 AM

Google News

ADDED : மே 05, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் சுற்று வட்டார பகுதிகளான கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், கொண்டையம் பாளையம், பங்களாபுதுார், வாணிப்புத்துார், டி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை முதல் வழக்கம்போல் வெயில் வாட்டியது.

இந்நி-லையில் மாலை, 4:00 மணி அளவில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது.இதை தொடர்ந்து மிதமான சாரல் மழை பெய்தது. வாணிப்புத்-துார்-கெங்கர்பாளையம் சாலையில் அரசமரம் மரம் வேருடன் சாய்ந்ததில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. மரக்கிளை பட்டதில் அறுந்த மின் கம்பிகளை, மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர்.

அரச மரத்தை தாக்கிய இடி

நம்பியூர், பட்டிமனிக்காரன் பாளையம், மீன்காரம்பாளையம், வேமாண்டபாளையம், குட்டகம், சூரிபாளையம், பொலவபா-ளையம் பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது. அதை தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. பட்டிமணியக்காரம் பாளையம், சின்னியந்தோட்டம் பகுதியில் அரசமரத்தில் இடி விழுந்ததில் தீப்பற்றி எரிந்தது. நம்-பியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை

அணைத்தனர்.

சாய்ந்த தென்னை மரம்

கோபியில் சத்தி சாலையில், மங்களபுரம் பகுதியில், நேற்று மாலை 4:30 மணிக்கு, பலத்த காற்றுடன், சாரல் மழை பெய்தது. அப்போது தென்னை மரம் மின்பாதையில் விழுந்ததில், மின் கம்பம் பிரதான சத்தி சாலையில் சாய்ந்தது.

மின்வாரிய பணியாளர்கள் மின் இணைப்பை துண்டித்து, சீர-மைக்கும் பணியில் ஈடுபட்டனர். அரசூர்புதுார் மின் வாரிய பிரிவு அலுவலக மேற்கூரை மீது பொருத்தியிருந்த இரும்பு டவர் முறிந்து, மரத்தின் மீது விழுந்தது. காசியூரில் இருந்து பிள்-ளையார் கோவில் துறை செல்லும் சாலையில், பலத்த காற்றால் தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில், மின்கம்பம் முறிந்தது.

ஆலங்கட்டி மழை

சத்தியமங்கலத்தை அடுத்த கே.என்.பாளையம், தாசரிபாளையம் பகுதிகளில் நேற்று மதியம், 3:00 மணி முதல், 4:00 மணி வரை சூறாவளிக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

தாசரிபாளையம் பகுதியில் சூறாவளிக்காற்றால் ஆறுமுகம், வெள்-ளியங்கிரி வீட்டு முன்பிருந்த வேப்ப மரம் முறிந்து வீட்டின் கூரை மீது விழுந்ததில் சேதமடைந்தது.






      Dinamalar
      Follow us