sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பர்கூர் வனத்துறை அதிகாரிகளுக்கு பழங்குடி மக்கள் சங்கம் கண்டனம்

/

பர்கூர் வனத்துறை அதிகாரிகளுக்கு பழங்குடி மக்கள் சங்கம் கண்டனம்

பர்கூர் வனத்துறை அதிகாரிகளுக்கு பழங்குடி மக்கள் சங்கம் கண்டனம்

பர்கூர் வனத்துறை அதிகாரிகளுக்கு பழங்குடி மக்கள் சங்கம் கண்டனம்


ADDED : செப் 27, 2025 01:12 AM

Google News

ADDED : செப் 27, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின், ஈரோடு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், மாவட்ட சங்கத்தலைவர் கடம்பூர் ராமசாமி தலைமையில் சத்தியமங்கலத்தில் நேற்று நடந்தது.

பல தலைமுறைகளாக காப்புக்காடுகளை ஒட்டிய தரிசு நிலங்களில் பழங்குடிகளும், இதர மலைவாழ் மக்களும் விவசாயம் செய்து வாழ்கின்றனர். இந்நிலங்களை காடு ஓர புறம்போக்கு என, வருவாய் ஆவணங்களில் வகைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது ஒதுக்கப்பட்ட வன நிலமாக மாற்றியுள்ளனர்.

இதனால் அவற்றில் விவசாயம் செய்து வரும் மக்களை வெளியேறுமாறு, வாய்மொழியாகவும், எழுத்து பூர்வமாகவும் பர்கூர் வனத்துறையினர் நிர்ப்பந்தித்து வருகின்றனர். இது தொடர்பாக எந்த அரசு உத்தரவும் இல்லாதபோது பர்கூர் வனத்துறை மக்களை மிரட்டியும்-விரட்டியும் வருவது நியாயமற்ற செயல்.

வன உரிமைச் சட்டப்படி வன-நில உரிமையை அங்கீகரிக்கும் பணியை தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை தற்போதுதான் துவங்கியுள்ளது. ஆனால் அரசின் மற்றொரு துறை அந்த நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பர்கூர் வனத்துறையின் சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில் தாளவாடி, அந்தியூர், டி.என்.,பாளையம் பகுதிகளில் இருந்து கிராம சங்க நிர்வாகிகள், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us