/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புன்செய்புளியம்பட்டியில் மழைநீருடன் சாலையில் ஓடிய கழிவு நீரால் தவிப்பு
/
புன்செய்புளியம்பட்டியில் மழைநீருடன் சாலையில் ஓடிய கழிவு நீரால் தவிப்பு
புன்செய்புளியம்பட்டியில் மழைநீருடன் சாலையில் ஓடிய கழிவு நீரால் தவிப்பு
புன்செய்புளியம்பட்டியில் மழைநீருடன் சாலையில் ஓடிய கழிவு நீரால் தவிப்பு
ADDED : நவ 15, 2024 02:00 AM
புன்செய்புளியம்பட்டியில் மழைநீருடன்
சாலையில் ஓடிய கழிவு நீரால் தவிப்பு
புளியம்பட்டி, நவ. 15-
புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் மாலை, 4:௦௦ மணியளவில் புன்செய்புளியம்பட்டி, டாணாபுதுார், தாசம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. சாரலாக தொடங்கிய மழை சிறிது நேரத்தில் மிதமான மழையாக மாறியது.
புன்செய்புளியம்பட்டி-மாதம்பாளையம் சாலை, வாரச்சந்தை, தங்கசாலை வீதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. திரு.வி.க., கார்னர் மற்றும் வாரச்சந்தை முன் சாக்கடை துார்வாரப்படாததால் கழிவுநீருடன் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.
*ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி, கொடிவேரி அணையில்-2.4 மி.மீ., மழை, அம்மாபேட்டை-2, சென்னிமலை-1, ஈரோட்டில்-0.2 மி.மீ., மழை பதிவானது. மாநகரில் நேற்று காலை முதல் அவ்வப்போது மேகமூட்டமும், சிறிய அளவில் மழையும் பெய்தது.