/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளாஸ்டிக் கழிவுடன் வந்த ஈச்சர் வேன் சிறை-பிடிப்பு
/
பிளாஸ்டிக் கழிவுடன் வந்த ஈச்சர் வேன் சிறை-பிடிப்பு
பிளாஸ்டிக் கழிவுடன் வந்த ஈச்சர் வேன் சிறை-பிடிப்பு
பிளாஸ்டிக் கழிவுடன் வந்த ஈச்சர் வேன் சிறை-பிடிப்பு
ADDED : ஜன 27, 2026 10:44 AM

பவானி: அம்மாபேட்டை அருகே குதிரைக்கல்மேடு பகு-தியில் உள்ள கரும்பு ஆலைக்கு, கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த ஈச்சர் வேனுக்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று சிறை பிடித்தனர்.
இதுபற்றி மக்கள் கூறியதாவது: அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில், ஏராளமான கரும்பு ஆலை செயல்படுகிறது. பிளாஸ்டிக் கழி-வுகளை பயன்படுத்தி இந்த ஆலைகளில் அடுப்பு எரிக்கின்றனர். இதில் வரும் புகையை சுவா-சிக்கும் போது, மூச்சுதிணறல், ஆஸ்துமா உள்-ளிட்ட நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். கரும்பு ஆலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும். இவ்-வாறு கூறினர். இதையறிந்த அம்மாபேட்டை போலீசார் சென்றனர். அதன் பிறகும் கழிவுகளை இறக்க கூடாது என
மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அம்மாபேட்டை பி.டி.ஓ., மணிமேகலை, மாணிக்கம்பாளையம் பஞ்., அலுவலகத்தில், வேனை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

