/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் பலி
/
லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் பலி
ADDED : டிச 03, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: தர்மபுரி மாவட்டம், போச்சம்பள்ளியை சேர்ந்தவர் திருமலை, 21; லாரி டிரைவர்.
இவர், நேற்று முன்தினம் இரவு முள்ளங்கி லோடு ஏற்றிக்கொண்டு, திருச்சி
மார்க்கெட்டை நோக்கி சென்று-கொண்டிருந்தார். புதுச்சத்திரம் அருகே, ரெட்டிபுதுார்
வழியாக சென்றபோது, டிரைவர் திருமலை கண் அயர்ந்துள்ளார். அப்-போது,
கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி
விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் திருமலை சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தார். காரிமங்கலத்தை சேர்ந்த கிளீனர் கோகுல், 20, படுகாயங்களுடன்
சிகிச்சை பெற்று வரு-கிறார். புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.