/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
71 மது பாட்டிலுடன் இரண்டு பேர் கைது
/
71 மது பாட்டிலுடன் இரண்டு பேர் கைது
ADDED : ஆக 12, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, நாராயண வலசு டாஸ்மாக் கடை அருகே, நேற்று முன்தினம் காலை விற்பனைக்காக, 60 பிராந்தி பாட்டில்களை வைத்திருந்த, சேலம், ம.தோப்பூரை சேர்ந்த முருகேசன், 46, என்பவரை, வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் ஈரோடு குமலன்குட்டை டாஸ்மாக் கடை அருகே, 11 பிராந்தி பாட்டில்களை வைத்திருந்த மதுரை, பழங்காநத்தத்தை சேர்ந்த லட்சுமணன், 48, என்பவரை, சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

