sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

7 கி.மீ., துாரம் நடந்தபடி பம்பை வாசிப்பு பவானி அருகே இரு சிறுவர்கள் அசத்தல்

/

7 கி.மீ., துாரம் நடந்தபடி பம்பை வாசிப்பு பவானி அருகே இரு சிறுவர்கள் அசத்தல்

7 கி.மீ., துாரம் நடந்தபடி பம்பை வாசிப்பு பவானி அருகே இரு சிறுவர்கள் அசத்தல்

7 கி.மீ., துாரம் நடந்தபடி பம்பை வாசிப்பு பவானி அருகே இரு சிறுவர்கள் அசத்தல்


ADDED : நவ 14, 2025 01:16 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, நவ. 14

பவானி அருகே இரண்டு சிறுவர்கள், 7 கி.மீ., துாரம் நடந்தபடி, பம்பை வாசித்த நிகழ்வை, உலக சாதனையாக இரு அமைப்புகள் அங்கீகாரம் செய்துள்ளன.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பாலக்காட்டூரை சேர்ந்தவர் கீர்த்திவாசன், 14; கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன். கடந்த ஐந்து ஆண்டுகளாக பம்பை வாசித்து பயிற்சி பெற்று வருகிறார்.

இவரின் நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் தனுஷ்குமார், 17; இவரும் ஏழு ஆண்டாக பம்பை வாசிப்பு பயிற்சி பெற்று வருகிறார்.

இருவரும் நேற்று காலை, 8:30 மணியளவில், கவுந்தப்பாடியில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பம்பை வாசித்தபடி எங்கும் நிற்காமல் தொடர்ந்து வாசித்தபடி, 7 கி.மீ., துாரமுள்ள பாலக்காட்டூர் லட்சுமி நரசிம்மர் கோவிலை, 10:00 மணிக்கு அடைந்தனர்.

இந்நிகழ்வை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ரெக்கார்டர் இந்தியா அகடாமி என இரு அமைப்புகள், உலக சாதனை நிகழ்வாக பதிவு செய்துள்ளன. இந்த அமைப்புகள் வழங்கிய உலக சாதனை விருதை, பவானி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கருப்பணன் வழங்கினார்.

இரு சிறுவர்களுக்கும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். இரண்டு சிறுவர்களின் தந்தையும், மேள வாத்திய கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us