sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செல்போன் திருடிய இருவருக்கு சிறை

/

செல்போன் திருடிய இருவருக்கு சிறை

செல்போன் திருடிய இருவருக்கு சிறை

செல்போன் திருடிய இருவருக்கு சிறை


ADDED : டிச 20, 2024 07:09 AM

Google News

ADDED : டிச 20, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த செட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஹரி பிரசாத், 32; தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் நின்றிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர், அவரிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். ஹரிபிரசாத் பதில் கூற முயன்ற போது, எதிர்பாராத விதமாக, அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை, பைக் பின்னால் அமர்ந்திருந்த ஆசாமி பறிக்க, மின்னல் வேகத்தில் பைக் பறந்தது.

ஹரிபிரசாத் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த தாராபுரம் போலீசார், பைக் பதிவெண்ணை கொண்டு விசாரணையில் ஈடுபட்டனர். இதில் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த சஞ்சய், 21, ஷ்யாம், 24, என்பதும், கோவிந்தாபுரம் அருகே கோழிப்பண்ணையில், இருவரும் வேலை செய்து வந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us