sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கல்லுாரி மாணவி உள்பட இருவர் விபரீத முடிவு

/

கல்லுாரி மாணவி உள்பட இருவர் விபரீத முடிவு

கல்லுாரி மாணவி உள்பட இருவர் விபரீத முடிவு

கல்லுாரி மாணவி உள்பட இருவர் விபரீத முடிவு


ADDED : ஜூன் 15, 2025 02:01 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் பூபாலன். கோவை சாலையில் மெஸ் நடத்தி வருகிறார். இவரின் மகள் திவ்யதர்ஷினி, 17; கோவையில் ஒரு தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., முதலாமாண்டு சேர்க்கப்பட்டிருந்தார்.

வகுப்பு இன்னும் தொடங்கவில்லை. வழக்கம்போல் இரவில் வீட்டு வேலை முடித்து விட்டு, மெஸ்சுக்கு செல்வார். நேற்று முன்தினம் இரவு செல்லாததால், மொபைல்போனில் மகளை பூபாலன் தொடர்பு கொண்டார். அழைப்பை ஏற்காத நிலையில் வீட்டுக்கு சென்றபோது கதவு தாழிடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது, சேலையால் துாக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார்.

கதவை உடைத்து சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

பெருந்துறையில்...

பெருந்துறையை அடுத்த வண்ணாங்காட்டு வலசை சேர்ந்தவர் சதீஸ்குமார், 49; திருமணமாகி குழந்தைகள் இல்லை. ஏழு ஆண்டுகளுக்கு முன் மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார். இதனால் மது குடிப்பது அதிகரித்தது. நேற்று முன்தினம் வாந்தி எடுத்து மயங்கி கிடந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us