ADDED : ஜூன் 28, 2026 02:17 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்; சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம் அருகேயுள்ள பட்டவர்த்தி அய்யம்பாளையம் கருமொக்கை என்ற இடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில், சரளை மண் கடத்தப்படுவதாக,
சிக்கரசம்பாளையம் வி.ஏ.ஓ., கருப்புசாமிக்கு தகவல் கிடைத்தது. போலீசுடன் அவர் சம்பவ இடத்துக்கு சென்றபோது ஜே.சி.பி., வாகனம், டிராக்டர் மட்டுமே நின்று கொண்டிருந்தது. வி.ஏ.ஓ., புகாரின்படி சத்தி போலீசார் வாகனங்-களை பறிமுதல் செய்து விசாரணை மேற்-கொண்டுள்ளனர்.
