/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதை மாத்திரையுடன் இரு வாலிபர்கள் கைது
/
போதை மாத்திரையுடன் இரு வாலிபர்கள் கைது
ADDED : ஜூன் 07, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, :போதை மாத்திரை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்படி, வீரப்பன்சத்திரம் எஸ்.ஐ., சபியுல்லா தலைமையிலான போலீசார், பெரியவலசு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர்
. அந்தியூர், குந்துபாரியூர் முபாரக் அலி மகன் கொபர் அலி, 19; பெரியவலசு, முத்துமாரியம்மன் கோவில் பகுதி நாகராஜ் மகன் பிரவீன், 19, என தெரிந்தது. வலி நிவாரண மாத்திரை எனக்கூறி போதை மாத்திரைகளை விற்றது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, 10 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.