ADDED : அக் 21, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, திருப்பூர் மார்க்கமாக செல்லும் தண்டவாளத்தில், நேற்று முன் தினம் இரவு, 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. நீல நிற ஜீன்ஸ் பேண்ட், கருப்பு-வெள்ளை முழுக்கை சட்டை அணிந்திருந்தார். வலது முன் கை இல்லை.
இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.