ADDED : அக் 24, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மணிக்கூண்டு நேதாஜி சாலையில், 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாக்கடையில் தவறி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் இறந்தார்.
சிகிச்சையின் போது தனது பெயர் குமார் என்று தெரிவித்துள்ளார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து, ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

