sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காவிரி, பவானி ஆறுகளின் உபரிநீர் சேமிப்பு திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தல்

/

காவிரி, பவானி ஆறுகளின் உபரிநீர் சேமிப்பு திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தல்

காவிரி, பவானி ஆறுகளின் உபரிநீர் சேமிப்பு திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தல்

காவிரி, பவானி ஆறுகளின் உபரிநீர் சேமிப்பு திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தல்


ADDED : செப் 26, 2024 02:35 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: -காவிரி மற்றும் பவானி ஆறுகளின் உபரி நீரை ஏரி, குளங்களில் சேமிக்கும் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, அந்தியூரில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியு-றுத்தினர்.திருப்பூர் எம்.பி., சுப்பராயன், முன்னாள் எம்.பி., கோவிந்-தராஜர், முன்னாள் எம்.எல்.ஏ., குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, கொளத்துார் பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டைகளை, பவானி, காவிரி ஆறுகளின் உபரிநீரை நிரப்பி சேமிக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பர்கூர் மலைப்பகுதியில் தோனிமடுவு திட்டம், டி.என்.பாளையம் மலைப்பகுதியில் இருந்து வரும் காட்-டாற்று வெள்ளநீரை

சேமிக்கும் வேதபாறை அணைத்திட்டம் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது.அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, டி.என். பாளையம், கொளத்துார் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கருத்துகளை தெரி-வித்தனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரவணன், தி.மு.க., பொதுக்குழு

உறுப்பினர் மாதேஸ்வரன், அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிசாமி, தொழில்நுட்ப மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us