/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
/
மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
ADDED : டிச 30, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, மக்கள் குறைதீர் கூட்டத்தில் குறிச்சி மக்கள் மனு கொடுத்தனர்.
பவானி தாலுகா குறிச்சி, செல்லிகவுண்டனுார் குடியிருப்பு பகு-தியினர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறிய-தாவது: செல்லிகவுண்டனுார் குடியிருப்பில் நுாற்றுக்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் பல ஆண்டாக வசிக்கிறோம். அருகே உள்ள இடத்தை மயானமாக பல ஆண்டாக பயன்படுத்து-கிறோம். ஆனால் மயான இடம் தங்களுக்கு சொந்தமானது எனக்-கூறி, சிலர் ஆக்கிரமித்து கொண்டனர். தற்போது இறுதி சடங்கை செய்ய இயலாமல் சிரமப்படுகிறோம். அவ்விடத்தை மாவட்ட நிர்வாகம் அளவீடு செய்து, மயானத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு கூறினர்.

