ADDED : மே 16, 2026 05:27 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் விடுதலை இயக்க செயலர் புஷ்பலதா தலைமையிலானோர், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக தலைவர் திருமாவளவன் செயல்பட்டு வருகிறார். அவர் மீது சமூக வலைதளங்களில் ஜாதிய அடிப்படையில் அவதுாறாக பேசி, இழிவுபடுத்தும் வீடியோ பதிவுகளை 'ரெக்ேஸானா ரெக்ஸ்' என்ற ஐ.டி.,யில் இருந்து சோனா என்ற பெண் பரப்பி வருகிறார். அவர் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
