/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'வி.சி., மது ஒழிப்பு மாநாடு அரசுக்கு எதிரானது அல்ல'
/
'வி.சி., மது ஒழிப்பு மாநாடு அரசுக்கு எதிரானது அல்ல'
'வி.சி., மது ஒழிப்பு மாநாடு அரசுக்கு எதிரானது அல்ல'
'வி.சி., மது ஒழிப்பு மாநாடு அரசுக்கு எதிரானது அல்ல'
ADDED : செப் 11, 2024 04:17 AM
ஈரோடு: ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்-பைக்கான விளையாட்டு போட்டியை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நேற்று தொடங்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:
வி.சி.க., சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாடு, அரசுக்கு எதிரானது அல்ல. தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்த அவர்கள் நடத்துகின்றனர். எந்த கட்சி வேண்டுமானலும் கோரிக்-கையை வைக்க மாநாடு நடத்தலாம். இந்த மாநாட்டில் அரசுக்கு பின்னடைவு இல்லை.இந்த அரசு மதுவை தொடங்கி, அதற்கு மாநாடு நடந்தால் அதுதான் பின்னடைவு. மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்து-வது தொடர்பாக, துறை ரீதியாக ஆலோசித்து தான் முடிவு வெடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.* போட்டியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்த நிலையில், முதல் போட்டியாக, பள்ளி மாணவர்களுக்கான கால்-பந்து போட்டி நடந்தது. அதன்பின், நீச்சல் மற்றும் கேரம் போட்டி நடந்தன.திண்டல் வேளாளர் கல்லுாரியில் கிரிக்கெட் போட்டியும், ரங்கம்-பாளையம் எஸ்.எஸ்.வி.என்., பள்ளியில், கோ-கோ போட்டியும் நடந்தது. இதில், 25க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அணி, 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள்
அணிகள் பங்கேற்றன.

