sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காய்கறி வியாபாரிகள் மேயரிடம் முறையீடு

/

காய்கறி வியாபாரிகள் மேயரிடம் முறையீடு

காய்கறி வியாபாரிகள் மேயரிடம் முறையீடு

காய்கறி வியாபாரிகள் மேயரிடம் முறையீடு


ADDED : பிப் 29, 2024 04:10 AM

Google News

ADDED : பிப் 29, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு ஆர்.கே.வி., சாலையில், நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கிய இடத்தில் கட்டப்பட்ட நவீன காய்கறி சந்தை வளாகம், திடீரென நேதாஜி வணிக வளாகமாக மாற்றப்பட்டு, சமீபத்தில் திறக்கப்பட்டது. மேலும், சோலாரில் ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைக்கப்படும் என்று மாநகராட்சி உறுதி அளித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர், மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். புதிதாக திறக்கப்பட்ட வணிக வளாகத்தை, அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கே ஒதுக்கி தரக்கோரி, மேயரிடம் முறையிட்டனர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக, மேயர் நாகரத்தினம் தெரிவித்தார். இதையடுத்து காய்கறி வியாபாரிகளிடம், மாநகராட்சி அதிகாரிகள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆர்.கே.வி., சாலையில் புதிதாக திறக்கப்பட்ட வணிக வளாகத்துக்கான பொது ஏலம் இன்று நடக்கிறது.






      Dinamalar
      Follow us