/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் வாகன தணிக்கை
/
ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் வாகன தணிக்கை
ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் வாகன தணிக்கை
ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் வாகன தணிக்கை
ADDED : ஜன 09, 2025 07:57 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள, கருங்கல்பாளையம் சோதனை சாவடியில், தீவிர வாகன தணிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி, இடைத்தேர்தல் ஓட்டுப்ப-திவு நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமு-றைகள் நேற்று முன்தினம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளை-யத்தில், போலீசார் சோதனை சாவடி உள்ளது. இது நாமக்கல்--சேலம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. வழக்கமாகவே இங்கு, 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு, சோதனை பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை அமலாகி உள்ளது. எனவே, போலீசார் தீவிர வாகன தணிக்கையை மேற்கொள்ள துவங்கி உள்ளனர். பணம், பரிசு பொருட்கள், ஆயுதங்கள், மது-பான வகைகள், வெளியூர் ஆட்கள் வந்து செல்வது உள்ளிட்ட-வற்றை தீவிரமாக கண்காணித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்-றனர். சோதனை சாவடியில் போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்-பட்டுள்ளது. மூன்று ஷிப்டுகளாக போலீசார் வாகன தணிக்-கையை மேற்கொள்வர். சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இடங்-களில், மேலும் கூடுதலாக சோதனை சாவடிகள் ஓரிரு நாட்களில் அமைக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.

