/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேளாளர் கல்வியியல் கல்லுாரி 17வது பட்டமளிப்பு விழா
/
வேளாளர் கல்வியியல் கல்லுாரி 17வது பட்டமளிப்பு விழா
வேளாளர் கல்வியியல் கல்லுாரி 17வது பட்டமளிப்பு விழா
வேளாளர் கல்வியியல் கல்லுாரி 17வது பட்டமளிப்பு விழா
ADDED : டிச 13, 2025 06:21 AM

ஈரோடு: ஈரோடு திண்டல் வேளாளர் கல்வியியல் கல்லுாரி, 17வது பட்டம-ளிப்பு விழா நடந்தது. இதில், 2021--23ம் கல்வியாண்டிற்குரிய மாணவியர் பட்டம் பெற்றனர். சிறப்பு விருந்தினராக சாம்பியா, லுசாகா டி.எம்.ஐ., பல்கலை சார்பு துணைவேந்தர் பாலசுப்பிர
மணியன் பங்கேற்றார்.
வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயக்குமார், வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் தாளாளர் சந்தி-ரசேகர், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, குலசே-கரன் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றமைக்காக, விஜயலட்சுமி குமாரசாமி அறக்கட்டளை நினை-வுப்பரிசை இளங்கலையில் சக்தி மற்றும் முதுகலையில் பெற்-றனர். இளங்கலை கல்வியியலில், 200 மாணவியர், முதுகலை கல்வியி-யலில், 50 பேர் என, 250 மாணவிகள் பட்டம் பெற்றனர்.
இளங்கலை தேர்வில் முன்னிலை பெற்ற மாணவிகளுக்கும், முது-கலை தேர்வில் முன்னிலை பெற்ற மாணவிகளுக்கும் கல்லுாரி சார்பில் நினைவு பதக்கம் வழங்கப்பட்டது. சிறந்த கொடை பணிக்காக புரவலர் விருது, தங்கம் மருத்துவமனை மருத்துவர் சிவராமனுக்கு கல்லுாரி சார்பாக வழங்கப்பட்டது.

