/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி சாதனை
/
வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி சாதனை
ADDED : மே 15, 2025 01:35 AM
ஈரோடு :ஈரோடு, திண்டல் வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி, 2024--25ம் கல்வியாண்டில் நடைபெற்ற, 10 மற்றும் 12ம் வகுப்பு வாரியத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
இதில், 12-ம் வகுப்பில் மாணவர் ஜெய்ஸ்வர், -488 மதிப்பெண்கள், திருக்குமரன்,- 484, நிகிலா, - 483, கர்ஷினி-, 477, விக்ரம் பிரஹலாத்,- 474 மதிப்பெண்கள் பெற்றனர். 10ம் வகுப்பில் சம்ரிதா, -488, மயங்க்ஜெயின் -487, ரிதன்யாஸ்ரீ-, 478,
சக்திஸ்வரன், -477, பிரணவன், -477 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், பள்ளி தலைவர் ஜெயக்குமார், தாளாளர் சந்திரசேகர், வேளாளர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், யுவராஜா, வேலுமணி மற்றும் பள்ளி முதன்மை முதல்வர் நல்லப்பன், பள்ளி முதல்வர் பிரியதர்ஷினி, துணைமுதல்வர் மஞ்சுளா, மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.