ADDED : ஆக 21, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர்
சங்கம் சார்பில் மாவட்ட துணை தலைவர் முத்துபிரகாஷ் தலைமையில்
ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிராம உதவியாளர்களுக்கு அலுவலக
உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம், 15,700 ரூபாய் வழங்க
கோரி, ஆணையர் முன்மொழிவு கடிதம் வழங்கியும் இதுவரை வழங்கவில்லை.
அரசாணை உடன் வழங்க வேண்டும். கடந்த காலங்களில் வழங்கியது போல, கருணை
அடிப்படையில் அலுவலக உதவியாளர், கரிாம நிர்வாக அலுவலர், இளநிலை
வருவாய் உதவியாளர் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். கிராம
உதவியாளர்கள், 2,299 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது
உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் செய்தனர்.
