sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குளம், சுடுகாட்டை சொந்தம் கொண்டாடும் கிராமம் இரண்டு கிராம மக்கள் கலெக்டரிடம் முறையீடு

/

குளம், சுடுகாட்டை சொந்தம் கொண்டாடும் கிராமம் இரண்டு கிராம மக்கள் கலெக்டரிடம் முறையீடு

குளம், சுடுகாட்டை சொந்தம் கொண்டாடும் கிராமம் இரண்டு கிராம மக்கள் கலெக்டரிடம் முறையீடு

குளம், சுடுகாட்டை சொந்தம் கொண்டாடும் கிராமம் இரண்டு கிராம மக்கள் கலெக்டரிடம் முறையீடு


ADDED : ஆக 12, 2025 02:11 AM

Google News

ADDED : ஆக 12, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, கொடுமுடி அருகே சோழக்கிராய்மேடு, சின்னபனைபுதுார் பகுதி கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:

கொந்தளம் கிராமத்துக்கு உட்பட்ட சோழக்கிராய்மேடு, சின்னபனைபுதுார், கல்லாபுரங்கோட்டை அருகே, 2.5 ஏக்கரில் குளம், அதன் அருகே சுடுகாடும் உள்ளது. இவை இரண்டும், சோழக்கிராய்மேடு, சின்னபனைபுதுார், கல்லாபுரங்கோட்டை ஊர்களுக்கு பொதுவானது.

தற்போது குளம் மற்றும் சுடுகாட்டை கல்லாபுரங்கோட்டைக்கு மட்டும் சொந்தமானது என குறிப்பிட்டு சிலர் உரிமை கொண்டாடுகின்றனர். அங்கு தென்னை, மரக்கன்று நட்டு எங்கள் பகுதிக்கு வரும் காவிரி குடிநீரையும் பாய்ச்சுகின்றனர். குளத்தில் மீன்பிடிக்க எங்கள் பகுதியினர் சென்றால் வரக்கூடாது என்றும் மிரட்டுகின்றனர். இது சமூக ரீதியிலான பிரச்னையாக மாறி வருகிறது. கொடுமுடி போலீஸில் புகார் செய்து விசாரித்தாலும், நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, மூன்று கிராமங்களுக்கும் குளம், சுடுகாடு பொதுவானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us