sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வில்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

/

வில்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

வில்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

வில்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா


ADDED : செப் 06, 2025 01:39 AM

Google News

ADDED : செப் 06, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை :குளித்தலை அடுத்த. கூடலுார் பஞ்., பேரூரில் அமைந்துள்ள வில்வ விநாயகர் கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள், விழாக்குழுவினர் முடிவு செய்தனர்.

விழாவை முன்னிட்டு,கடந்த 4ம் தேதி காலை குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் மேள தாளங்கள் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக புனிதநீரை கொண்டு வந்தனர். புனிதநீர் அடங்கிய கும்பத்தை யாகசாலையில் வைத்தனர்.

தொடர்ந்து மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது.நேற்று காலை கோமாதா பூஜையுடன் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது, தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனிதநீர் அடங்கிய கும்பத்தினை கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பின் தீபாராதனை காட்டப்பட்டது. விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.தோகைமலை யூனியன் குழு தலைவர் சுகந்தி சசிக்குமார், முன்னாள் பஞ்., தலைவர்கள் கழுகூர் முத்து சாமி, கூடலுார் அடைக்கலம். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us