sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'மனைவிக்கு தங்க நகை வாங்க ஆசை': உறவினர் வீட்டில் திருடியவர் கைது

/

'மனைவிக்கு தங்க நகை வாங்க ஆசை': உறவினர் வீட்டில் திருடியவர் கைது

'மனைவிக்கு தங்க நகை வாங்க ஆசை': உறவினர் வீட்டில் திருடியவர் கைது

'மனைவிக்கு தங்க நகை வாங்க ஆசை': உறவினர் வீட்டில் திருடியவர் கைது


ADDED : ஆக 28, 2024 07:26 AM

Google News

ADDED : ஆக 28, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: எழுமாத்துார், தொட்டிபாளையம் புதுாரை சேர்ந்தவர் தங்கமுத்து, 47; டாஸ்மாக் கடை விற்பனையாளர். திருமணமாகி குழந்தைகள் உள்ளன. கடந்த, 23ம் தேதி கணவன், மனைவி வேலைக்கு சென்று விட்டனர்.

குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டனர். மறுநாள் பீரோவை திறந்து பார்த்தபோது, ஐந்தரை பவுன் தாலிக்கொடி, வெள்ளை அரைஞாண் கயிறு, வெள்ளி கொலுசு திருட்டு போனது தெரிந்தது. மொடக்குறிச்சி போலீசில் தங்கமுத்து புகாரளித்தார். வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்படாமல் திருட்டு நடந்ததால், வீட்டுக்கு வந்து சென்ற யாரோதான் கைவரிசை காட்டியிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர்.

தங்கமுத்து வீட்டுக்கு எதிரே வசிக்கும், அவரது உறவினரும், பேக்கரி ஊழியருமான, 46 புதுார், ஆணைக்கல்பாளையத்தை சேர்ந்த திருமணிகண்டன், 28, என்பவரிடம் விசாரித்தனர். தனது மனைவிக்கு நகை வாங்க, தங்கமுத்து வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். அடமானம் வைத்த நகை, வெள்ளி பொருட்களை கைப்பற்றி, திருமணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us