ADDED : மே 12, 2026 05:04 AM
பவானிஅத்தாணி வன எல்லை பகுதிக்கு உட்பட்ட குளத்துக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி கவுதம். இவரது விவசாய தோட்டத்தில், சிறுத்தை நடமாட்டம் நேற்று முன்தினம் இருப்பதாக அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அப்பகுதியில் ஆய்வு செய்த வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். இந்நிலையில் அண்ணாநகர், சஞ்சீவிராயன்கோவில் பகுதி, பொன்னாச்சியம்மன் கோவில் பகுதி, காக்காச்சிகுட்டை, உரம்புகிணறு, செம்புளிச்சாம்பாளையம், உரக்கோம்பை, அம்மா நகர் பகுதிகளில் நேற்று வீடு வீடாக சென்று, பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுடன் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கினர்.
சிறுத்தையை பிடிக்க கூண்டு, கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வனத்துறையினரும் சிறப்பு ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
