sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கீழ்பவானி வாய்க்காலில் முறை வைத்து நீர் வினியோகம்

/

கீழ்பவானி வாய்க்காலில் முறை வைத்து நீர் வினியோகம்

கீழ்பவானி வாய்க்காலில் முறை வைத்து நீர் வினியோகம்

கீழ்பவானி வாய்க்காலில் முறை வைத்து நீர் வினியோகம்


ADDED : செப் 30, 2024 12:59 AM

Google News

ADDED : செப் 30, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்பவானி வாய்க்காலில்

முறை வைத்து நீர் வினியோகம்

ஈரோடு, செப். 30-

கீழ்பவானி வாய்க்காலில், முறை வைத்து நீர் வினியோகம் செய்ய நீர்வளத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்காலில், 2024--25ம் ஆண்டு முதல் போக பாசனத்துக்கு ஒற்றைப்படை மதகுகள், சென்னசமுத்திரம் பகிர்மான வாய்க்காலில் இரட்டைப்படை மதகுகளில், ஒரு லட்சத்து, 3,500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு ஆக., 15 முதல் டிச., 12 வரை, 120 நாட்களுக்கு அரசாணையின்படி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு பாசனப்பகுதியில் போதிய மழை பெய்யாததால், அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் போதிய பாசன நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு, வரும் நாட்களில் முறை வைத்து நீர் வினியோகம் செய்ய நீர் வளத்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஓரிரு நாட்களில் முறை வைத்து நீர் வினியோகிக்கப்பட உள்ளது.

வடகிழக்கு பருவ மழை கைகொடுக்கும் பட்சத்தில், முழுமையாக நீரை வினியோகம் செய்யவும், அதுவரை முறை வைத்து நீர் வினியோகிக்கவும் நீர் வளத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு கூறுகையில்,''தண்ணீர் திருட்டை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். இயற்கையும் கை கொடுக்க வேண்டும். பாசன சபையினர், விவசாயிகளிடம் நீர்வளத்துறையினர் பேசி வருகின்றனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us