/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : டிச 03, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்ட
மலைப்பகுதிகளில், தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு
நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 914 கனஅடியாக இருந்த
நீர்வரத்து, 3,192 கனஅடியாக நேற்று அதிக-ரித்தது. நேற்றைய நிலவரப்படி,
அணை நீர்மட்டம், 97.82 அடி, நீர் இருப்பு, 27 டி.எம்.சி.,யாக இருந்தது. பாசனத்துக்காக
கீழ்ப-வானி வாய்க்காலில் இருந்து, 1,000 கன அடி தண்ணீர் நேற்று மாலை முதல்
திறக்கப்பட்டது.