sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,346 கன அடியாக அதிகரிப்பு

/

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,346 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,346 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,346 கன அடியாக அதிகரிப்பு


ADDED : மே 22, 2025 01:54 AM

Google News

ADDED : மே 22, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு, 2,346 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையில், 105 அடி உயரம் வரை நீர் தேக்கி வைக்க முடியும். அணையின் மொத்த கொள்ளளவு, 32.8 டி.எம்.சி., அணையில் சேகரிக்கப்படும் தண்ணீரால், 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை இல்லாததால் கடந்த இரண்டு மாதங்களாக, அணைக்கு நீர் வரத்து சரிந்தது.

இந்நிலையில், இரண்டு மூன்று நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 278 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று வினாடிக்கு, 2,346 கன அடியாக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 69.57 அடியாகவும், நீர் இருப்பு, 10.7 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. குடிநீர் தேவைகளுக்காக, ஆற்றில், 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.






      Dinamalar
      Follow us