sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கீழ்பவானி பாசன சிறப்பு நனைப்புக்கு இன்று முதல் 135 நாள் தண்ணீர் திறப்பு

/

கீழ்பவானி பாசன சிறப்பு நனைப்புக்கு இன்று முதல் 135 நாள் தண்ணீர் திறப்பு

கீழ்பவானி பாசன சிறப்பு நனைப்புக்கு இன்று முதல் 135 நாள் தண்ணீர் திறப்பு

கீழ்பவானி பாசன சிறப்பு நனைப்புக்கு இன்று முதல் 135 நாள் தண்ணீர் திறப்பு


ADDED : ஜூலை 31, 2025 02:26 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி பாசனத்துக்கு இன்று முதல், 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் மூலம், கீழ்பவானி பாசன பகுதியில் இரு போகங்களாக, 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். ஆக., 15ல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

தற்போது அணை நிரம்பி வருவதுடன், நீர் வரத்தும் திருப்திகரமாக உள்ளதால், முன்னதாக திறக்க விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் கோரி வருகின்றனர்.

இதையேற்று, நீர் வளத்துறை செயலர் ஜெயகாந்தன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

பவானிசாகர் அணையில் இருந்து, 2025-26ம் ஆண்டு முதல் போக பாசனத்துக்கு, கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் இரட்டை படை மதகுகள், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலம், 1 லட்சத்து, 3,500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்படுகிறது.

இதன்படி இன்று (31) முதல் ஆக., 14 வரை தினமும் வினாடிக்கு, 2,300 கனஅடி வீதம், 15 நாட்களுக்கு சிறப்பு நனைப்புக்கு, 2,980.80 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், ஆக., 15 முதல் டிச., 12 வரை, 120 நாட்களுக்கு முதல் போக நன்செய் பாசனத்துக்கு, 23,846.40 மில்லியன் கனஅடிக்கு மிகாமலும், மொத்தம், 135 நாட்களுக்கு, 26,827.20 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும். அணையின் தற்போதைய நீர் இருப்பு, வரத்தை பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து

உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us